பிக்பாஸ் பூர்ணிமாவை கண்டுகொள்ளாதது ஏன்? 9 வருட நட்பு.. இந்துஜா பதிலடி?

பிக்பாஸ்க்கு பார்க்கிங் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா சென்று இருந்தார்கள். ஆனால் இந்துஜா போட்டியாளர் பூர்ணிமாவை மட்டும் கண்டு கொள்ளாதது போல் இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு காரணம் பூர்ணிமா சக போட்டியாளர்களிடம் நானும் இந்துஜாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். 9 வருட நட்பு எங்களுடையது என்று கூறியிருந்தார். இந்துஜா வேண்டுமென்றே பூர்ணிமாவிடம் இருந்து விலகி செல்வது போல் தெரிந்தது. இந்துஜாவின் இந்த செயலால் பூர்ணிமாவின் முகமும் வாடியது.

பிறகு பூர்ணிமா மாயாவிடம் நானும் அவளும் ஒன்றாகவே தான் இருப்போம். என் வீட்டுக்கு அவள் வருவாள். அவள் வீட்டுக்கு நான் போவேன் என்று புலம்பினார்.

பிக்பாஸ் பார்வையாளர்களும் எதனால் இந்துஜா பூர்ணிமாவை கண்டு கொள்ளவில்லை? ஒருவேளை பிக்பாஸ்சில் பூர்ணிமா செயல் பிடிக்கவில்லையா? இவர்களுக்குள் எதேனும் பிரச்சினையா? இல்லை பெரிய நடிகை ஆகிவிட்டதால் நட்பை மறந்துவிட்டாரா? என பல கேள்விகளை சமூக வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனர். மேலும் இந்துஜா பூர்ணிமாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரவில்லை என்றும் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் இந்துஜாவின் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து “சரியான விஷயங்களை செய்ய நேரம் எப்போதும் சரியானதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

பலரும் இந்துஜா பூர்ணிமாவின் நட்பை முறித்து கொண்டது பற்றி தான் இப்படி மறைமுகமாக பேசியுள்ளார் என்று பேசி வருகிறார்கள். இந்துஜாவே நேரடியாக பூர்ணிமா உடனான நட்பை பற்றி கூறுகிறாரா என்று பொறுத்து இருந்து பாப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: