Tag: Gnanavelraja

பருத்திவீரன் சர்ச்சை: “எகத்தாளப் பேச்சு” ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த சமுத்திரக்கனி
Cinema

பருத்திவீரன் சர்ச்சை: “எகத்தாளப் பேச்சு” ஞானவேல்ராஜாவை கிழித்தெடுத்த சமுத்திரக்கனி

பருத்திவீரன் படம் தொடர்பான பிரச்சினை 16 ஆண்டுகளாகியும் தீர்வு இல்லாமல் கன்னித்தீவு கதை போல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் ஏன் வரவில்லை என்று தொடங்கிய சர்ச்சை மூலம் பருத்திவீரன் படப் பிரச்சினை மீண்டும் வெளிச்சதுக்கு வந்துள்ளது. இயக்குனர் அமீரும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். யார் சொல்வது தான் உண்மை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழ.. அமீர்க்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், பாரதிராஜா, கரு பழனியப்பன் என பலரும் குரல் கொடுத்தனர். அதன் விளைவாக ஞானவேல்ராஜாவும் என் வார்த்தைகள் அமீர் அண்ணாவை காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கைக்கு சசிகுமார் இவரே திட்டமிட்டு அவமானப்படுத்திட்டு இவரே வருத்தம் தெரிவிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார். ...
பருத்திவீரன் சர்ச்சை : “அமீர் அண்ணா..” மனம்வருந்திய ஞானவேல்ராஜா
Cinema

பருத்திவீரன் சர்ச்சை : “அமீர் அண்ணா..” மனம்வருந்திய ஞானவேல்ராஜா

பருத்திவீரன் படத்தால் இயக்குனர் அமீர்க்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாக்கும் இடையே கடுமையான பிரச்சினை போய் கொண்டிருக்கிறது. இருவருமே ஒருவர் மேல் ஒருவர் பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். ஆனால் ஞானவேல்ராஜா இந்த பிரச்சினை குறித்து சமீபத்திய பேட்டியில் அமீரை பற்றி மிகவும் மோசமாக பேசியிருந்தார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் அமீர். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை இப்படி தரம்தாழ்ந்து விமர்சிப்பது கண்டிக்கதக்கது என சமூக வலைத்தளத்தில் பேசி வந்தனர். அமீர்க்காக முதல் ஆளாக நடிகரும் இயக்குனருமான சசிகுமார் ஆதரவாக குரல் கொடுத்தார். இது அப்படியே பூதாகரமாக வெடிக்க.. சசிகுமாரை தொடர்ந்து சமுத்திரக்கனி, பொன்வண்ணன், கரு பழனியப்பன், பாரதிராஜா என பலரும் ஞானவேல்ராஜாவை கண்டிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டு அமீர்க்கு ஆதரவாக பேசி வ...