தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை.. நுரையீரல் சிகிச்சை உதவி தேவைப்படுகிறது என மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நம்பவர் 18 ஆம் தேதி விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்த்த நிலையில் உடல்நிலை சீராக இல்லாத காரணத்தால் சிகிச்சை தொடந்துக் கொண்டே இருக்கிறது.
மருத்துவமனையும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால்.. நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. விரைவில் பூரண நலம் பெறுவார் என நம்புகிறோம். 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை என்று அறிக்கை வெளியிட்டனர்.
இந்த அறிக்கை மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மனைவி பிரேமலதா விஜயகாந்த் உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் கேப்டன் நலமாக உள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று பேசியுள்ளார்.
