திரௌபதி படம் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை ஷீலா ராஜ்குமார். டூலெட், மண்டேலா, நம்ம வீட்டு பிள்ளை, பிச்சைக்காரன் 2 போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படி வளர்ந்து வரும் நடிகை ஷீலா தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

அழகிய தமிழ் மகள் என்ற ஜீ தமிழ் சீரியலில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு பட வாய்ப்புகள் வர அதை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒரு குறும்படத்தில் நடிக்க ஷீலாக்கு வாய்ப்பு வந்தது. அப்படி தான் உதவி இயக்குனர் தம்பி சோழன் உடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.
காதல் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்க.. வீட்டை எதிர்த்து கொண்டு நடுக்கடலில் இவர்களின் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் மிகவும் காதலித்து தான் கல்யாணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் ஷீலா X தளத்தில் “திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
நன்றியும் அன்பும் சோழன்” என்று கணவர் தம்பி சோழன் உடன் விவாகரத்து ஆனதை கூறியுள்ளார்.
எதனால் இந்த முடிவு என்பது தெரியவில்லை. பலரும் ஷீலாக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கமென்ட் செய்து வருகிறார்கள்.
